Pages

Tuesday, January 30, 2018

வரமொன்று கேட்பேன்.

பிறவாமலிருந்திருந்தால் இறவாமலிருந்திருக்கலாம்
பிறந்து தொலைத்தபின்
வளராமலிருந்திருந்தால்
பிஞ்சாகவேனுமிருந்திருக்கலாம்

காம குரோதங்களுக்காட்பட்டு
அண்டத்துக்குள் பிண்டமாய் உழன்றுலைந்தோ
பற்றறுத்து
பாரந்தொலைக்கும் தினத்துக்காய்
தவமிருந்தோ
பிறவிப்பெருங்கடல் நீந்திக்
கரையேறும் நொடி வரையான
களத்தில் உலுக்கப்படுவதுதான்
வாழ்வெனில்
பிண்டமாய் வந்து விழுவதைக்காட்டிலும்
அண்டத்தில் ஓர் துகளாய்
மின்னி மறைவது வரம்.