Pages

Monday, October 17, 2016

கரையும் துளி


கோபம் ஏற்படுத்தும்போது
விலகி நடக்கவும்
பிரியத்தைக்கொட்டும்போது
ஏந்திக்கொள்ளவும்
தனிமைத்தவத்தில்
நிச்சலத்துடனிருக்கவும்
மகிழ்வில் ஆர்ப்பரிக்கவும்
பிரிவேற்படும்போது சகித்துக்கொள்ளவுமென
எல்லாம் பழகிக்கொண்டாயிற்று
ஆயினும்,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பமாய்
துளிர் விடும் கண்ணீரை
என்ன செய்வதென்றுதான்
இன்னும் பிடிபடவில்லை
போகட்டுமென அதில் கரைந்து விடுவதைத்தவிர..

6 comments:

Unknown said...

true
the reason is we are not buddhhas mahavir or ramana maharishi....

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

Chandrakumar said...

உணர்வுப் பூரணமான, மிக அருமையான கவிதை.
ஒரு சின்ன பிழைத் திருத்தம்
நிச்சலத்துடனிருக்கவும் ==> நிச்சலனத்துடனிருக்கவும் !
வாழ்த்துகள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்திரகுமார்,

நிச்சலம் எனில் அசைவின்மை, உறுதி, நித்தம், நித்தியத்துவம், முழுப்பட்டினி எனப் பல பொருள் உண்டு என அகராதி சொல்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தர்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.