Pages

Thursday, December 15, 2011

வீடென்பது...


(படம் பிடிச்ச என்னோட காமிராவுக்கு நன்றி :-))
அவனும் அவளுமான சிற்றோடைகள்
கை கோர்த்து நடந்த
பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்
சங்கமமாயின வீடெனும் கடலில்..
வீடெனும் சொல்
திறந்து விட்டு விட்ட
நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த
ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,
கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது
கம்பிகளினூடே வெயிலில்
பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்
வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..
பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்
கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன
இப்போதாவது வந்தாயாவென..
தனக்கென்றதோர் கூடாயும்
அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,
அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)